செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1447 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று 1,307 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 1,447 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குடிநீருக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 97.58 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 97.52 அடியாக சரிந்தது.