செய்திகள்
ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்-வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்
ஜி.எஸ்.டி.யில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை வர்த்தகர்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டுமென திருப்பூர் ஆடிட்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி., குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடைபெற்றது. நிறைவு நாளன்று ஆடிட்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-
ஜி.எஸ்.டியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.அவற்றை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம்.கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அனைத்து வர்த்தகர்களும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து ரசீதுகளிலும் பொருட்களின் எச்.எஸ்.என்.,கோடு கட்டாயம் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறு, சிறு வர்த்தகர்கள், மாதம்தோறும் வரி தொகையை செலுத்திவிட்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை மட்டும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்றார்.