செய்திகள்
விபத்து காயம்

பாபநாசத்தில் விபத்தில் வாலிபர் காயம்

Published On 2021-05-26 10:01 GMT   |   Update On 2021-05-26 10:01 GMT
பாபநாசத்தில் விபத்தில் வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

சீர்காழி தர்கா தெருவை சேர்ந்தவர் அபுதாஹீர் (வயது 37) இவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் பாபநாசம் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மோதியதில் அபுதாஹீர் பலத்த அடிபட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் பாபநாசம் தலைமை காவலர் ஞானசேகர் லாரி டிரைவர் திருச்சி ஏசுராஜ் (47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News