செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட ராஜா.

பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை

Published On 2021-05-22 06:46 GMT   |   Update On 2021-05-22 06:48 GMT
ஊரடங்கால் வேலை இழந்ததால் திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:

சேலம் மாவட்டம் வருசலூரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). பனி யன் நிறுவனத்தில் பேக்கிங் தொழில் செய்து  வந்தார்.இவர் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் மனைவி இந்திராணி,மகன் தினேஷ்குமார் (16), மகள் கனிஷ்கா (14) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜாவுக்கு  அதிக கடன் இருந்தது. ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் பணத்தை எப்படி கொடுக்க போகிறோம் என்று சில நாட்களாக கவலையில் இருந்து வந்தார்.

மேலும் தனது மனைவியின் கண் சிகிச்சைக்கு பணம் இல்லா மல் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்த ராஜா, சம்பவத்தன்று வீட்டின் மேற்கூரையில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News