செய்திகள்
நீடாமங்கலம் வட்டாரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை தொற்று ஏற்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை தொற்று ஏற்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.
நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணியில் 2 பேர், வடுவூரில் 2 பேர், பொதக்குடியில் 6 பேர், ராயபுரத்தில் 7 பேர் என 17 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், கலையரசன், சரவணன், சண்முகராஜன் மற்றும் சுகாதார செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை தொற்று ஏற்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.
நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணியில் 2 பேர், வடுவூரில் 2 பேர், பொதக்குடியில் 6 பேர், ராயபுரத்தில் 7 பேர் என 17 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், கலையரசன், சரவணன், சண்முகராஜன் மற்றும் சுகாதார செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.