செய்திகள்
தற்கொலை

ஊரடங்கால் விரக்தி- நேபாள பெண் தற்கொலை

Published On 2021-05-19 08:27 GMT   |   Update On 2021-05-19 08:27 GMT
பரத்-கமலா இருவரும் கடந்த ஜனவரியில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் மனைவியுடன் சென்னைக்கு வந்த பரத் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
போரூர்:

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பரத். இவரது மனைவி கமலா (19). இவர்கள் இருவரும் அசோக் நகர் 1-வது அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். பரத் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கமலா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அசோக்நகர் போலீசார் கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒமந்தூரார் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரத்-கமலா இருவரும் கடந்த ஜனவரியில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் மனைவியுடன் சென்னைக்கு வந்த பரத் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக காதல் கணவருடன் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே தவித்து வந்த கமலா விரக்தி அடைந்தார்.
கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த கமலா தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News