செய்திகள்
கைது

மதுக்கடையில் ரூ.30 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு- 2 பேர் கைது

Published On 2021-05-18 10:40 GMT   |   Update On 2021-05-18 10:40 GMT
நன்னிலம் அருகே மதுக்கடையில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புடைய மதுபாட்டில்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பனங்குடியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. கடந்த மாதம் (ஏப்ரல்) இந்த கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நன்னிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் ஆண்டிபந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆண்டிபந்தல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராராந்திமங்கலம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது42), அந்தோணிராஜ் (42) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து கடந்த மாதம் பனங்குடியில் உள்ள மதுக்கடையில் மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பால்ராஜ், அந்தோணிராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News