செய்திகள்
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,551 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று மட்டும் 1,551 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மட்டும் 1752 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் கொரோனா மற்றும் 6 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 22 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.