செய்திகள்
திருப்பூர் விஜயாபுரம் சாலையில் தடுப்புகள் வைத்து சாலைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

இ-பாஸ் பதிவால் திருப்பூர் எல்லையில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-05-16 07:16 GMT   |   Update On 2021-05-16 07:16 GMT
இ-பதிவையொட்டி திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில்  பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இரு சக்கர வாகனங்களிலேயே சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
 
இந்தநிலையில் நாளை முதல் இ-பதிவு நடைமுறைக்கு வருவதால் திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.
 
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல்  இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே  மற்ற மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேவையின்றி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News