செய்திகள்
ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாதேஷ் (வயது 21), கட்டிட மேஸ்திரி. இந்த நிலையில் நேற்று அதிகாலை மாதேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாதேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாதேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.