செய்திகள்
120 புதிய உழவர் சந்தைகள், 24 செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்: வேளாண்துறை அமைச்சர்
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ‘‘உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 120 புதிய உழவர் சந்தைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 24 செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். 8 வழிச்சாலை திட்டம், ஹாட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது’’ என்றார்.