செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் 242 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-01 01:32 GMT   |   Update On 2021-05-01 01:32 GMT
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,119 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 138 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 242 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,119 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 138 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 242 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,223 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News