செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருவத்தூரை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 33). இவரும், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும்(48) ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். நாரணமங்கலம் பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் அறிவழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள், 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.