செய்திகள்
முத்துப்பேட்டை அருகே விபத்தில் 2 பேர் காயம்
முத்துப்பேட்டை அருகே விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் நமச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் அருட்செல்வன் (வயது 20).
இவர் தாணிக்கோட்டகத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு தனது தயார் கலாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுவிட்டு ஊர் திரும்பினார்.
அப்பொழுது இடும்பாவனம் அருகே எதிரே மேலதொண்டியக்காடு கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிமாறன் (31) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அருட்செல்வத்திற்கும், மணிமாறனுக்கும் பலத்தை காயம் ஏற்பட்டது. கலா காயம் ஏதுமின்றி தப்பினார்.
இதனையடுத்து காயம் அடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.