செய்திகள்
கோப்புபடம்

காரிமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய பாலிடெக்னிக் மாணவர் கைது

Published On 2021-04-17 09:25 GMT   |   Update On 2021-04-17 09:25 GMT
காரிமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய சம்பவம் குறித்து பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள எலுமிச்சினஅள்ளி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி காவேரிப்பட்டணத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்குடப்பட்டியை சேர்ந்த பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும் 16 வயது மாணவர், அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியை மீட்டு தர்மபுரியில் உள்ள காப்பகத்தில்ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News