செய்திகள்
கோப்புபடம்

அத்தியூர் வார சந்தையில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி

Published On 2021-04-16 16:49 GMT   |   Update On 2021-04-16 16:49 GMT
அத்தியூர் வார சந்தையில் தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அடுத்த மரூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி என்கிற ஏழுமலை(வயது 55). தொழிலாளியான இவர் நேற்று அத்தியூர் வார சந்தைக்கு பொருட்கள் வாங்க சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள மது கடையில் மது அருந்திய ஏழுமலை போதையால் நிலைதடுமாறி சாலையோரம் மயங்கி விழுந்தார். 

நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏழுமலையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் ஏழுமலை மது போதையில் இறந்தாரா? அல்லது வெயிலின் தாக்கத்தால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News