செய்திகள்
நூற்பாலையில் தீ கொளுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம்.

திருப்பூர் அருகே நூற்பாலையில் தீ விபத்து- பல லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2021-04-15 09:51 GMT   |   Update On 2021-04-15 09:51 GMT
திருப்பூர் அருகே இன்று காலை நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள குட்டகாடு பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை நூற்பாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் புகை எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது பஞ்சுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் பஞ்சுகள் என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

உடனே இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர், வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த தீ விபத்தில் கழிவு பஞ்சுகள், எந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாகின. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் . தீ விபத்துக்கான காரணம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News