செய்திகள்
உவரி சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை:
குமரி மாவட்டம் திட்டு விளையை சேர்ந்தவர் கார்லஸ் (வயது58).
சப்-இன்ஸ்பெக்டரான இவர் கடந்த 2½ ஆண்டுகளாக நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கார்லசுக்கு கடந்த மாதம் 16-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனே அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுமார் ஒரு மாத காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கார்லஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்லசுக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதில் செல்வி கூடங்குளத்தில் உள்ள ஆர்.சி. பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.