செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 6,711 பேருக்கு கொரோனா- 19 பேர் உயிரிழப்பு

Published On 2021-04-12 12:54 GMT   |   Update On 2021-04-12 12:54 GMT
தமிழகத்தில் தற்போது வரை 46,308 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று 2,339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 6,711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2339 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 8,80,910 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் தனியார் மருத்துவமனையில் 11 பேர், அரசு மருத்துவமனையில் 8 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12927 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது வரை 46,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 82,982 மாதிரிகளும், 82,202 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 2,06,03,108 மாதிரிகளும், 2,02,71,805 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 2105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News