செய்திகள்
கோப்புபடம்

இளம்பிள்ளை அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2021-04-11 09:33 GMT   |   Update On 2021-04-11 09:33 GMT
இளம்பிள்ளை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே உள்ள சாலை ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37), தறித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா என்கிற ஞானமலர் (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் அவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6-ந் தேதி வாக்களிக்க செல்வதாக கூறி சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சங்கீதாவின் தாயார் சாலம்மாள், மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இது குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News