செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் அருகே ரெயில் மோதி 2 பேர் உயிரிழப்பு

Published On 2021-04-11 02:22 GMT   |   Update On 2021-04-11 02:22 GMT
விழுப்புரம் அருகே ரெயில் மோதி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கொரத்திஅக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் விஜய் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் இவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விழுப்புரம் அருகே சேர்ந்தனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்று பாலத்தின் அருகில் ரெயில்வே தண்டவாளத்தில் விஜய் நடந்து சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் மருதூர் ஏரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் இறந்திருப்பது தெரியவந்தது.

மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News