செய்திகள்
கோப்புப்படம்

திருவையாறு அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு

Published On 2021-04-10 09:43 GMT   |   Update On 2021-04-10 09:43 GMT
திருவையாறு அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை வடக்கு வெள்ளாளத்தெருவை சேர்ந்தவர் ரெத்தினகுமார் (55), விவசாய கூலி. இவருக்கு லெட்சுமி (41) என்ற மனைவியும், வீரமணி (21) என்ற மகனும், அமர்தவர்சினி (8) என்ற மகளும் உள்ளனர்.

இரவு வீட்டு ஹாலில் படுத்திருந்தனர். அப்போது 2 மர்மநபர்கள் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி திறந்து உள்ளே புகுந்து லெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இதுகுறித்து நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. சித்திரவேல், நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

வீரமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News