செய்திகள்
பொன்னேரி அருகே கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி என்.ஜி.ஓ.நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குமரன் தெருவை சார்ந்த நாகராஜ் (வயது 29) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி என்.ஜி.ஓ.நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குமரன் தெருவை சார்ந்த நாகராஜ் (வயது 29) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.