செய்திகள்
கொரோனா வைரஸ்

பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு

Published On 2021-04-04 14:31 GMT   |   Update On 2021-04-04 14:31 GMT
பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 100 படுக்கைகளை கொண்ட தனி வார்டாக அது தயார் நிலையில் உள்ளது.
பழனி:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. இதேபோல் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பழனி அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 100 படுக்கைகளை கொண்ட தனி வார்டாக அது தயார் நிலையில் உள்ளது.
Tags:    

Similar News