செய்திகள்
வாகன சோதனை

பறக்கும் படை சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ. 8¾ லட்சம் பறிமுதல்

Published On 2021-04-03 13:34 GMT   |   Update On 2021-04-03 13:34 GMT
நத்தம் அருகே செந்துறையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
செந்துறை:

நத்தம் அருகே செந்துறையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணக்காட்டூரில் இருந்து நத்தம் நோக்கி சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 950 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் காரில் வந்தவர்களிடம் அந்த பணத்திற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் அதிகாரிகள் திருமலை, விஜயலட்சுமியிடம் கொடுத்தனர். அவர்கள், அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News