தஞ்சை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையிலும், சுமூகமாகவும் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள மதுபானக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களை வருகிற 4-ந் தேதி காலை 10 மணி முதல் 6-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2-ந் தேதி அன்று முழுவதும் மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்பட உள்ளது.
இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்படின் தொடர்புடைய டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் தனியார் மதுபானக்கூட உரிமையாளர்கள் மீது உரிய விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.