செய்திகள்
ஆற்காட்டில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆற்காடு:
ஆற்காடு நகரம் தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் கங்காதர ஈஸ்வரர் கோவில் தெரு, ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை, ஆரணி சாலை, வழியாக மீண்டும் கோவிலை சென்றடையும். இதனால் இப்பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.