செய்திகள்
தொழிலாளி பலி

அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

Published On 2021-03-24 11:04 GMT   |   Update On 2021-03-24 11:04 GMT
அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சி:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செங்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அலோசியஸ் என்பவரது வீட்டை புதுப்பிக்கும் பணிக்காக வேலைக்கு வந்திருந்தார்.

இவர் நேற்றுமுன்தினம் மதியம் தான் தங்கியிருக்கும் வீடு அருகில் குடிசை வீட்டிற்கு செல்லும் மின்சார வயரை எதிர்பாராதவிதமாக பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News