செய்திகள்
உயிரிழப்பு

கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

Published On 2021-03-18 10:26 GMT   |   Update On 2021-03-18 10:26 GMT
பென்னாகரம் அருகே எலி தொல்லையை தடுக்க அமைக்கப்பட்டிருந்த கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகனம்பட்டியை சேர்ந்தவர் வடமலை (வயது 62). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இங்கு எலிகள் தொல்லையை தடுப்பதற்காக வயலை சுற்றிலும் கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்ச்சி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிய போது எதிர்பாராத விதமாக வடமலை எலியை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டு இருந்த மின் கம்பியை மிதித்து உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வடமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலி தொல்லையை கட்டுப்படுத்த தோட்டத்தில் போட்டு இருந்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News