செய்திகள்
கைது

அன்னூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Published On 2021-03-16 10:40 GMT   |   Update On 2021-03-16 10:40 GMT
அன்னூரில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர்:

அன்னூர் மசக்கவுண்டன்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மாணிக்கம்பாளையம் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடினார். அதை பார்த்த செந்தில்குமார் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த மணிவண்ணன் மகேஷ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News