செய்திகள்
பட்டாசு ஆலை விபத்து- மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
அச்சங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து இறந்தனர். இதுவரை 25 பேர் பலியாகியிருந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த படந்தாலை சேர்ந்த சந்தனமாரி (வயது 35) இன்று பகல் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து இறந்தனர். இதுவரை 25 பேர் பலியாகியிருந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த படந்தாலை சேர்ந்த சந்தனமாரி (வயது 35) இன்று பகல் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.