செய்திகள்
துணை சபாநாயகர் பற்றி அவதூறு- பொள்ளாச்சியில் 2 தி.மு.க.வினர் கைது
துணை சபாநாயகர் ஜெயராமன் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக பொள்ளாச்சியில் தி.மு.க.வினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:
துணை சபாநாயகர் ஜெயராமன் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
இவரை பற்றி கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் சிலர் அவதூறு பரப்பி வந்தனர். இது குறித்து அ.தி.மு.க.வினர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கோவை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் பட்டீஸ்வரன், பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தாஸ்பிரபு ஆகியோர் அவதூறு பரப்பியது தெரியவந்தது.
இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பட்டீஸ்வரன், தாஸ்பிரபு ஆகியோரை கைது செய்தனர்.
துணை சபாநாயகர் ஜெயராமன் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
இவரை பற்றி கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் சிலர் அவதூறு பரப்பி வந்தனர். இது குறித்து அ.தி.மு.க.வினர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கோவை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் பட்டீஸ்வரன், பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தாஸ்பிரபு ஆகியோர் அவதூறு பரப்பியது தெரியவந்தது.
இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பட்டீஸ்வரன், தாஸ்பிரபு ஆகியோரை கைது செய்தனர்.