செய்திகள்
கைது

தஞ்சையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-03-09 09:53 GMT   |   Update On 2021-03-09 09:53 GMT
தஞ்சையில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை பூச்சந்தை அருகே தெற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் திருட்டுதனமாக கஞ்சா விற்று கொண்டிருந்தார். விரைந்து சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியை சேர்ந்த மணிரத்தினம் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிரத்தினத்தை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேப்போல் மாரியம்மன்கோவில் சாலியக்குளக்கரையில் திருட்டுதனமாக கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த குமார் (24) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News