செய்திகள்
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து- தொழிலாளி பலி
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை அடுத்த மேல நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது45), கூலித்தொழிலாளி.
நேற்று இவரும் அதே பகுதியை சேர்ந்த இசக்கி முத்து (22) என்பவரும் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.
மோட்டார் சைக்கிளை இசக்கி முத்து ஓட்டினார். பின்னால் சுடலைகண்ணு அமர்ந்திருந்தார். சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் சென்ற போது பின்னால் இருந்த சுடலைக் கண்ணு எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த சுடலைக் கண்ணுவை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை அடுத்த மேல நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது45), கூலித்தொழிலாளி.
நேற்று இவரும் அதே பகுதியை சேர்ந்த இசக்கி முத்து (22) என்பவரும் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.
மோட்டார் சைக்கிளை இசக்கி முத்து ஓட்டினார். பின்னால் சுடலைகண்ணு அமர்ந்திருந்தார். சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் சென்ற போது பின்னால் இருந்த சுடலைக் கண்ணு எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த சுடலைக் கண்ணுவை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.