செய்திகள்
திருச்செங்கோடு அருகே ஆம்னி வேன்-கார் நேருக்கு நேர் மோதல்: பெண் பலி
திருச்செங்கோடு அருகே ஆம்னி வேன்-கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பெண் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள சோழசிராமணி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). ஜோதிடர். இவர் தனது மனைவி ராஜாமணி (58), மகள் இந்து (35), இவரது மகள் சுபஸ்ரீ (10) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேருடன் ஒரு காரில் நேற்று திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அப்போது திருச்செங்கோட்டில் இருந்து வேலூர் நோக்கி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார்-வேனில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜாமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மேலும் ஆம்னி வேனில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த மணிஷ், ஷாந்து, சுபார், மாரியப்பன், தில்லகா, செந்தில்குமார் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே உள்ள சோழசிராமணி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). ஜோதிடர். இவர் தனது மனைவி ராஜாமணி (58), மகள் இந்து (35), இவரது மகள் சுபஸ்ரீ (10) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேருடன் ஒரு காரில் நேற்று திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அப்போது திருச்செங்கோட்டில் இருந்து வேலூர் நோக்கி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார்-வேனில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜாமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மேலும் ஆம்னி வேனில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த மணிஷ், ஷாந்து, சுபார், மாரியப்பன், தில்லகா, செந்தில்குமார் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.