செய்திகள்
ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
கலவை அடுத்த கணியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன்கள் குமரேசன் (வயது 29), கார்த்திகேயன். இவர்கள் இருவரும் காஞ்சீபுரத்தில் ஓட்டல் நடத்திவந்தனர். பின்பு கலவையில் கடந்த 3 வருடமாக ஓட்டல் நடத்தி வருகின்றனர். இருவரும் ஓட்டல் நடத்துவதற்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் குமரேசனிடம், கார்த்திகேயன் ஓட்டலை ஒப்படைத்து விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
குமரேசன் சில மாதங்களாக ஓட்டலை மூடிவைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓட்டலை திறந்து நடத்தி வந்தார். கடன் கொடுத்தவர்கள் குமரேசனிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். குமரேசனின் மனைவி பிரசவத்திற்காக நாட்டேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த குமரேசன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை அடுத்த கணியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன்கள் குமரேசன் (வயது 29), கார்த்திகேயன். இவர்கள் இருவரும் காஞ்சீபுரத்தில் ஓட்டல் நடத்திவந்தனர். பின்பு கலவையில் கடந்த 3 வருடமாக ஓட்டல் நடத்தி வருகின்றனர். இருவரும் ஓட்டல் நடத்துவதற்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் குமரேசனிடம், கார்த்திகேயன் ஓட்டலை ஒப்படைத்து விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
குமரேசன் சில மாதங்களாக ஓட்டலை மூடிவைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓட்டலை திறந்து நடத்தி வந்தார். கடன் கொடுத்தவர்கள் குமரேசனிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். குமரேசனின் மனைவி பிரசவத்திற்காக நாட்டேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த குமரேசன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.