செய்திகள்
கைது

பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-03-05 09:32 GMT   |   Update On 2021-03-05 09:35 GMT
17 வயது நிரம்பவில்லை என்று மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை:

கோவை கணபதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவரது 4-வது மகள் பீளமேட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வெளியே சென்ற மாணவி மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் மாணவியை வீட்டருகே கறிக்கடையில் வேலை செய்த பாபு (21) என்பவர் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பது தெரியவந்தது.

இது குறித்து தெரியவந்ததும் மாணவியின் தாய் வாலிபரின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டார். அப்போது பாபுவின் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். 17 வயது நிரம்பவில்லை என்று பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை காப்பத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News