செய்திகள்
கைது

நெகமத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது

Published On 2021-03-04 09:45 GMT   |   Update On 2021-03-04 09:45 GMT
நெகமத்தில் குடும்ப தகராறில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 23). டிரைவர். இவருக்கும் நெகமத்தை சேர்ந்த ஜீவபாரதி (21) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜீவபாரதி பெற்றோர் வீட்டுக்கு திரும்பிச்சென்று விட்டார். 

இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ்குமார் நெகமத்தில் உள்ள மனைவியை பார்த்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அச்சம் அடைந்த ஜீவபாரதி இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News