செய்திகள்
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 26). இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இரவு தூங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வேந்திரன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.