செய்திகள்
கோவை அருகே மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை, கணபதி, வடகோவை, தண்ணீர்பந்தல், சங்கனூர் ரோடு, ஆத்துப்பாலம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அய்யாசாமி (வயது 65), பாண்டியன் (43), மாதவன் (34), சந்திரசேகர், பாண்டியராஜன் (31), போஸ் (46), சந்தோஷ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை, கணபதி, வடகோவை, தண்ணீர்பந்தல், சங்கனூர் ரோடு, ஆத்துப்பாலம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அய்யாசாமி (வயது 65), பாண்டியன் (43), மாதவன் (34), சந்திரசேகர், பாண்டியராஜன் (31), போஸ் (46), சந்தோஷ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.