செய்திகள்
திமுக

சட்டசபை தேர்தல்- தி.மு.க.வில் 7 ஆயிரத்து 500 பேர் விருப்ப மனு

Published On 2021-02-27 02:44 GMT   |   Update On 2021-02-27 02:44 GMT
திமுகவில் இதுவரையில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனுக்கள் வாங்கி சென்றுள்ளனர்.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.

அண்ணா அறிவாலயத்தில் நேற்று 10-வது நாளாக விருப்ப மனு வினியோகம் நடைபெற்றது. இதுவரையில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனுக்கள் வாங்கி சென்றுள்ளனர். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.

இன்று (சனிக்கிழமை) 11-வது நாளாக விருப்ப மனு வினியோகம் நடைபெற உள்ளது. 28-ந்தேதி (நாளை) விருப்ப மனுத்தாக்கல் நிறைவு பெற உள்ளது.
Tags:    

Similar News