செய்திகள்
கோப்புபடம்

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2021-02-26 11:37 GMT   |   Update On 2021-02-26 11:37 GMT
மங்களமேடு அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:

மங்களமேட்டை அடுத்துள்ள வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 42). விவசாயியான இவருக்கு கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வெங்கடேசன் நேற்று முன்தினம் மதியம் வேப்பூர் செல்வதற்கு தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பெருமாள் கோவில் வளைவில் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News