செய்திகள்
கமல் ஹாசன்

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு?: கமல் ஹாசன் கேள்வி

Published On 2021-02-25 13:48 GMT   |   Update On 2021-02-25 13:48 GMT
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்கள் நீதிமன்றம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதேபோல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான வகையில் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹசானும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது’’ எனப் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News