செய்திகள்
மதுரையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
மதுரை:
மதுரை பெத்தானியாபுரம் லேசர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 59). இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இவரது மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மணிமாறன் மனைவியுடன் பெத்தானியாபுரம் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
அவர் மனைவியுடன் கடந்த 17-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான அலங்காநல்லூர் மேலச்சின்னனம்பட்டிக்கு சென்றிருந்தார்.
அப்போது யாரோ மர்மநபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.6480 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் மணிமாறன் 18-ந்தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.6480 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக மணிமாறன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பெத்தானியாபுரம் லேசர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 59). இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இவரது மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மணிமாறன் மனைவியுடன் பெத்தானியாபுரம் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
அவர் மனைவியுடன் கடந்த 17-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான அலங்காநல்லூர் மேலச்சின்னனம்பட்டிக்கு சென்றிருந்தார்.
அப்போது யாரோ மர்மநபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.6480 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் மணிமாறன் 18-ந்தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.6480 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக மணிமாறன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.