செய்திகள்
காரைக்குடி அருகே தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது
காரைக்குடி அருகே தந்தையை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் சொர்ணலிங்கம் (வயது 54). இவர் அரியக்குடி ெரயில்வே கேட் அருகே கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் பிரதீப் ராஜா (29).சம்பவத்தன்று பிரதீப் ராஜா தனது தந்தையிடம் மகள்களுக்கு மட்டுமே எல்லாம் செய்கிறாய் எனக்கு ஏதும் செய்யவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது தகராறாக முற்ற பிரதீப் ராஜா அருகில் இருந்த கோழி வெட்டும் கத்தியை எடுத்து தனது தந்தையின் இடது கழுத்து, தலையின் பின்புறத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த சொர்ணலிங்கம் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் ராஜாவை கைது செய்தனர்.