செய்திகள்
தாக்குதல்

இளையான்குடி அருகே சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்

Published On 2021-02-18 08:39 GMT   |   Update On 2021-02-18 08:39 GMT
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாலைகிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுகாதார ஆய்வாளராக மனோஜ்குமார் (வயது 28) என்பவர் உள்ளார்.

சம்பவத்தன்று மனோஜ்குமார், அருண்ஜோஸ்வா, கார்த்திக் ஆகியோர் சாலை கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது முக கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது அதே பகுதியில் உள்ள ஜாகீர் உசேன் என்பவரின் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் விதிமுறைகளை மீறி கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் முக கவசம், சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை.

உடனே மனோஜ்குமார், கூட்டத்தை கூட்டக்கூடாது என ஜாகீர் உசேனிடம் கூறியுள்ளார். அரசு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை தாக்கியதாக ஜாகீர் உசேன் மீது மனோஜ்குமார் சாலைகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News