செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

Published On 2021-02-17 13:33 GMT   |   Update On 2021-02-17 13:33 GMT
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 29). இவர் நேற்று பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில், ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றில் இருந்து மணல் கடத்திக்கொண்டு வந்து கொண்டிருந்தார். காரை சுடுகாடு அருகே வரும்போது அங்கு ரோந்து பணியில் இருந்த ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்தி வந்த அசோக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News