செய்திகள்
விபத்து

தர்மபுரி அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-02-17 10:01 GMT   |   Update On 2021-02-17 10:01 GMT
தர்மபுரி அருகே விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 22). இவர் தர்மபுரி அருகே சவுளூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News