செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பயிர்க்கடன் ரத்து ரசீது- இன்று விவசாயிகளுக்கு வழங்குகிறார் முதலமைச்சர்

Published On 2021-02-13 02:55 GMT   |   Update On 2021-02-13 08:52 GMT
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.
சென்னை:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

மேலும் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 சேவை எண் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
Tags:    

Similar News