செய்திகள்
கோப்புபடம்

சிப்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் - 18 பேர் கைது

Published On 2021-02-07 13:24 GMT   |   Update On 2021-02-07 13:24 GMT
சிப்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 18 காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று, சிப்காட்டில் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்
Tags:    

Similar News